Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா- சீனா இடையே மோதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் கவலை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியா- சீனா இடையேயான மோதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லடாக் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்த சீனா இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

UN chief expresses concern on violence between China and India

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் திருப்பித் தாக்கியது. இதில் 43 சீனா வீரர்கள் பலியாகினர். இதனால் இருநாடுகளிடையே உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவும் சீனாவும் அதிகபட்ச பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று அன்டோனியா குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸின் செய்தி தொடர்பாளர் எரி கனெகோ கூறுகையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இருநாடுகளிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்துள்ளது கவலை தருகிறது. இரு நாடுகளும் அதிகபட்ச பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இருநாடுகளும் தங்களது பகுதிகளுக்குள் படைகளை விலக்கிக் கொண்டிருப்பதை வரவேற்கிறோம் என கூறியுள்ளார்.

Recommended Video

    IndiaChina Border Fight1975ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறை சீனா செய்யும் தவறு பதிலடிக்கு இந்தியா தயார்

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+