ஜோ பைடன் உயிரோடுதான் இருக்கிறாரா? அமெரிக்கா முழுக்க தொற்றிய பரபரப்பு.. இதுவரை இல்லாத திக்திக்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்வி திடீரென எழுந்துள்ளது. அமெரிக்காவில் இது புதிய விதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டு நெட்டிசன்கள் where is joe என்று டிரெண்டு செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இதுவரை பைடன் இருப்பிடம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஜோ பைடன் அதிகாரபூர்வ பயணமாக டெல்லவேர் செல்ல வேண்டும். ஆனால் அவர் செல்லவில்லை. அதோடு அவரின் முந்தைய ஏர்போர்ஸ் விமான பயணத்தில், அவருக்கு உடல்நிலை மோசமாகி, அவருக்கு விமானத்திலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதோடு தற்போது அவர் மருத்துவமனையில் உள்ளார். அவர் இன்று இரவை தாண்டுவதே கடினம் என்றும் ஒரு சில அமெரிக்காவை சேர்ந்த சிறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட தொடங்கி உள்ளன. ஜோ பைடன் உயிரோடுதான் இருக்கிறாரா என்பதே தற்போது பெரிய கேள்வியாக மாறி உள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளார்.லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டது. லேசான அறிகுறிகளை கொண்ட நிலையில் பிடன் தற்போது சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் அவரின் பயண திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
பதற்றம்: அப்படி இருக்க அவர் சோஷியல் ஊடகங்களில் கூட போஸ்ட் போடுவது இல்லை. இதனால் மொத்த நாடும் பதற்றத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்வி திடீரென எழுந்துள்ளது. அமெரிக்காவில் இது புதிய விதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்நாட்டு அதிபர் காணவில்லை.. அவரை பற்றிய செய்தியும் இல்லை.. என்னதான் நடக்கிறது அமெரிக்காவில் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்நாட்டு நெட்டிசன்கள் where is joe என்று டிரெண்டு செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இதுவரை பைடன் இருப்பிடம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
நேற்று கமலா ஹாரிஸ் பிரச்சாரத்தில் கூட பைடனின் ரெக்கார்ட் செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது என்றும் புகார் உள்ளது.
கமலா ஹாரிஸ் வளர்ச்சி; இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக தேர்வாகி உள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட சக கட்சி நிர்வாகிகளுக்கு போதிய நிதி கிடைக்காத நிலையில் கமலா அதிபர் வேட்பாளர் ஆவது உறுதியாகி உள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட கட்சி பிரநிதிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர். கட்சியின் வேட்பாளராக ஆவதற்கு போதுமான ஜனநாயக பிரதிநிதிகளின் ஆதரவைப் அவர் பெற்றுள்ளார். கட்சியில் அவருக்கு எதிராக நிற்க முயன்ற மற்ற ஜனநாயக கட்சி நிர்வாகிகள் யாருக்கும் பிரநிதிகள் ஆதரவு பெரிதாக கிடைக்கவில்லை.
முக்கியமாக கமலா ஹாரிஸுக்கு அதிக அளவில் நிதி கிடைத்துள்ளது. தேர்தல் நிதி திரட்டும் பணியைத் கமலா ஹாரிஸ் தொடங்கிய நிலையில், முதல் 24 மணி நேரத்தில் மட்டும் அக்கட்சிக்கு ₹677.6 கோடி நன்கொடை குவிந்துள்ளது.












Click it and Unblock the Notifications