டிரம்ப் வலையில் விழுந்த உக்ரைன்.. நாளை முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் ஜெலன்ஸ்கி
நியூயார்க்: ரஷ்யாவுடனான போரை நிறுத்துகிறேன் என்று கூறி, உக்ரைனின் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கவும், அதன் மூலம் வரும் லாபத்தை பிரித்துக்கொள்ளவும் டிரம்ப் கணக்கு போட்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் நாளை ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார்.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. போருக்காக செய்யப்பட்ட செலவுக்கு பதிலாக இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது.

உக்ரைனில் உள்ள வளங்கள்:
உக்ரைனில் லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் போன்ற அரிய கனிமங்களும், ஸ்கேண்டியம் போன்ற அரிய தாதுக்களும் இருக்கின்றன. இவை மின்சார வாகன உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று வரை சீனாதான் இந்த கனிமங்களை அதிக இருப்பு வைத்திருக்கிறது. எனவே, சீனாவை வீழ்த்த உக்ரைன் கனிமங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.
அதேபோல, விண்வெளி துறையிலும் இந்த கனிமங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே இவை அமெரிக்காவின் முதன்மை தேவையாக இருக்கின்றன.
ஏன் உக்ரைன் கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது?:
கடந்தை 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போரை அறிவித்தது. அப்போது தொடங்கி இப்போது வரை ₹5.45 லட்சம் கோடி அளவுக்கு ராணுவ உதவியை செய்திருக்கிறது. இது கடந்த 2024-2025 தமிழக பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியை விட ₹1.5 லட்சம் கோடி அதிகமாகும். பைடன் போன பிறகு டிரம்ப் புதிய அதிபராக பொறுப்பேற்றார். அவர், இழந்த பணத்தை எப்படி டபுளாக வசூலிப்பது என்று யோசித்திருந்தார்.
இந்த யோசனையின் அடிப்படையில்தான் கனிம வளங்களை சுரண்டுவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா செலவு செய்தது வெறும் ₹5.45 லட்சம் கோடிதான். ஆனால், கனிம வளங்களை சுரண்டுவதன் மூலம் ₹41.5 லட்சம் கோடியை கொள்ளையடிக்க டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார்.
ஒப்பந்தம் கையெழுத்து:
இது தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் நாளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார். அமெரிக்கா வந்து டிரம்ப்பை சந்திக்கும் அவர், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுகிறார். இதன் மூலம் ரஷ்யாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும், நீண்டகால பாதுகாப்பு உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி கூறுகிறார்.
ரஷ்யா-உக்ரைன் போரே தேவையில்லாத ஆணிதான். இதற்கு காரணமும் அமெரிக்காதான். அப்படி இருக்கையில் மீண்டும் ஏன் அமெரிக்காவின் உதவியை உக்ரைன் நாட வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
போருக்கான காரணம் என்ன?:
நேட்டோ எனும் ராணுவ கூட்டமைப்பை சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கியிருந்தது. சோவியத் உடைந்த பின்னர் இந்த கூட்டமைப்பு கலைக்கப்படவில்லை. இதில் முன்னாள் சோவியத் நாடுகள் அனைத்தும் சேர்ந்து வருகின்றன. உக்ரைன், ரஷ்யாவுக்கு பக்கத்து நாடு. இது நேட்டோவில் சேர முயன்றது. அப்படி நடந்தால், உக்ரைன்-ரஷ்யா எல்லையில் நேட்டோ படைகள் நிலை நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல்.
அதாவது பாகிஸ்தான்-இந்தியா எல்லையில் சீன ராணுவம் வந்தால் எப்படி இருக்கும்? எனவேதான் உக்ரைனுக்கு எதிராக போரை தொடங்கியது ரஷ்யா. இன்று இந்த போரை காரணம் காட்டி கனிம வள கொள்ளையில் அமெரிக்கா இறங்கியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications