சம்மர் வந்தாச்சு.. ஊட்டியை அலங்கரிக்க போகுது மலர் கண்காட்சி.. இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல்.. முழு விவரம்
நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டுக்கான கோடை விழா நடைபெறும் தேதியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா திருவிழாபோல களைகட்டும். சம்மரை செம்ம குஷியாகவும், குளு குளுவென்று அனுபவிக்கவும் சமவெளி பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் ஊட்டி, குன்னூருக்கு பொதுவாகவே வருகை தருவது வழக்கம்.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவை கண்டுகளிப்பதற்காக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் நீலகிரிக்கு வருகை தருவார்கள். இந்த கோடை விழாவில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர்க் கண்காட்சி, பழக் கண்காட்சி என ஊரே திருவிழாபோல காட்சியளிக்கும்.
கோடைக்காலம் துவங்கியுள்ளதால் இப்போதே நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தொடங்கிவிட்டனர். கடந்த சில வாரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகளும் முடிந்துவிடுவதால் கோடை விடுமுறையை குளுகுளுவென கழிப்பதற்காக மக்கள் நீலகிரிக்கு படையெடுக்கத் தொடங்கி விடுவார்கள்.
அவர்களுடைய விடுமுறையை கூடுதல் மகிழ்ச்சியோடு கழிக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் கோடை விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கோடை விழா மற்றும் உதகை மலர்க் கண்காட்சி நடைபெறும் தேதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து உதகை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி நடக்கிறது. கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13 ஆவது காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது.
மே 9 மற்றும் 10, 11 ஆகிய தேதிகளில் கூடலூரில் 11 ஆவது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. மே 10,11,12 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி நடைபெறுகிறது..
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. மே 23, 24, 25 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக் கண்காட்சி நடக்கிறது.
முதல்முறையாக குன்னூர் அருகே காட்டேரி பூங்காவில் மே 30 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications