விட்டாச்சு லீவு..ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா? கண்டிப்பாக இதை மறக்காதீங்க! வெளியான ஸ்ட்ரிக்ட் ஆர்டர்
நீலகிரி : கடந்த மே மாதம் முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த 4 மாதங்களாக அமலில் இருக்கிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோடைக்காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இப்படி கோடைக்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விபரங்களான பயணிக்கும் வாகனங்களின் பதிவெண், அவர்கள் வரும் நாள், தங்கும் காலஅளவு, தங்கம் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் கோடை கொடைக்கானல், நீலகிரியை சுற்றிப்பார்க்கவும் வரும் சுற்றுலா பயணிகள் முறையான இ-பாஸ்க்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும்.
மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து கடந்த மேதம் 6ஆம் முதல் காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற்று கொள்ளலாம். வெளிநாட்டு பயணிகள் தங்களுடைய இ-மெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டு பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்று சுற்றுலா சென்று வந்தனர். இதனால் எத்தனை பயணிகள் வந்தனர், அவர்கள் வந்த வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல் மாவட்ட நிர்வாககளுக்கு முழுமையாக கிடைத்தது. இதன் காரணமாக அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து தர முடிந்தது. இந்நிலையில் இ- பாஸ் நடைமுறை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த நீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமா இல்லை வேண்டாமா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. பலர் இ-பாஸுக்காக விண்ணப்பித்த நிலையில், சில விண்ணப்பிக்காமல் செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ-பாஸ் நடைமுறை தொடரும் எனவும் நீதிமன்றத்தின் மறு உத்தரவுக்குப் பிறகே இ-பாஸ் தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். தற்போதைய சூழலில் இ-பாஸ் நடைமுறை தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். இதனால் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்லும் பயணிகள் எடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications