நீலகிரியில் பயங்கரம்.. பல நாள் மிரட்டி வந்த காட்டெருமை.. முதியவரை குத்தி கிழித்து கொன்றது
நீலகிரியில் காட்டெருமை தாக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
ஊட்டி: பல நாள் மிரட்டி மிரட்டி வந்த காட்டெருமை, இன்று ஒரு முதியவரை குத்தி கிழித்து கொன்றுவிட்ட சம்பவம் நீலகிரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சடலத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வனத்துறையினருக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
வனப்பகுதியிலுள்ள காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி சில சமயம் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் கிராம மக்கள் எப்போதுமே பீதியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நீலகிரியில் தூதூர் மட்டம் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் நுழைந்துவிட்டன. எவ்வளவோ முறை விரட்டியும் அந்த 2 காட்டெருமைகளும் அங்கிருந்து நகரவில்லை.
தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததால் வனத்துறையினரிடமும் இது பற்றி முறையிடப்பட்டது. உயிர்பலி ஏற்படுவதற்குள் எப்படியாவது 2 காட்டெருமைகளை மயக்க ஊசி போட்டு காட்டிற்குள் விரட்டிவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் இது சம்பந்தமான நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் முதியவர் ஒருவரை காட்டெருமை தாக்கி விட்டது. இதில் உடலில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தியே உயிரிழந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட 11 மணி வரை முதியவரின் சடலத்துடனேயே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமைகளை பிடிப்பதாக உறுதி அளித்ததையடுத்து சடலம் கொண்டு செல்லப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications