அதிமுக புள்ளிக்கும் தொடர்புண்டு.. கொடநாடு வழக்கில் சயானின் வாக்குமூலம்.. இன்று விசாரணை, நேரில் ஆஜர்
கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
நீலகிரி: கொடநாடு வழக்கு தொடர்பாக, அதிமுக புள்ளிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக சயான் அளித்த வாக்குமூலம் இன்றைய தினம் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது.. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று விசாரணை நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!
கடந்த சில தினங்களாகவே கொடநாடு பங்களா விவகாரம் சூடுபிடித்துள்ளது.. இந்த பங்களாவின் கொலை, கொள்ளை வழக்கை போலீசார் மறுபடியும் விசாரிப்பதால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கம் திமுக இது சம்பந்தமான விவகாரத்தை கிளப்பி உள்ளது.. தேர்தல் பிரச்சாரங்களில் சொன்னதைபோலவே இது தொடர்பான கேள்விகளையும் கேட்டு வருகிறது.. குறிப்பாக தமிழக காங்கிரஸ், அதிமுகவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறது.. ஆனால், அதிமுகவோ அலறி கிடக்கிறது.

அதிமுக
எடப்பாடி பழனிசாமியின் பெயர் இதில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டதில் இருந்தே, அதிமுக மேலிடம் கலங்கி உள்ளது.. இது தொடர்பான விவாதங்களும் சோஷியல் மீடியாவில் தினமும் எழுந்தபடியே உள்ளன. மற்றொரு புறம், சட்டரீதியான நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கின்றன.. இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக போலீசார் கோர்ட்டின் அனுமதி பெற்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்...

சயான்
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், இப்போதைக்கு நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் தங்கியிருக்கிறார். அவரை மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர்... அதனால், கடந்த கடந்த 17-ந் தேதி ஊட்டியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார்... அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு
அப்போது, கொடநாடு வழக்கில் அதிமுக முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக சயான் தெரிவித்ததாக கூறப்படுகிறது... அதுமட்டுமல்ல, மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சயான் அப்போது போலீசாரிடம் தெரிவித்துள்ளார்... அந்த விவரங்களை எல்6லாம் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

தனபால்
அதேபோல, தனபால் என்பவருக்கும் போலீசார் அனுப்பினர்.. ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலம் கனகராஜின் அண்ணன்தான் தனபால்.. கொடநாடு வழக்கில் தேடப்பட்ட கனகராஜும் விபத்து ஒன்றில் இறந்திருந்த நிலையில், தன்னுடைய தம்பியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்னார் தனபால்.. அதனால்தான் அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. தனபாலும் ஊட்டிக்கு வந்து விசாரணையில் ஆஜரானார்.. ஒரு மணி நேரம் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.. தம்பியை திட்டமிட்டே கொன்றுவிட்டதாக தனபால் வாக்குமூலம் தந்தார்.

தாக்கல்
ஆக, சயான் மற்றும் தனபால் இருவரிடமும் வாக்குமூலம் பெற்று போலீசார் வைத்துள்ளனர்.. இந்த வழக்குதான் இன்றைய தேதி நீலகிரி மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது... இன்றைய தினம், சயான், தனபால் இருவரும் அளித்த வாக்குமூலம் விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.. அப்போது அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..

மனு
அதுமட்டுமல்ல, வழக்கின் சாட்சிகளில் ஒருவரான கோவையைச் சேர்ந்த ரவி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் இந்த வழக்கு தொடர்பாக தனக்கு மிரட்டல் வருவதாகவும், எனவே போலீஸ் மறுவிசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுத்திருந்தார்.. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "அரசு தரப்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும்... யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது...
Recommended Video

தீர்ப்பு
இதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதி அதாவது இன்றைய தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.இந்த தீர்ப்பும் இன்றுதான் வருகிறது.. அதிமுக புள்ளிகள் சிலர் மீது, சயான் குற்றச்சாட்டை கூறி வாக்குமூலம் தந்திருந்த நிலையில், இது தொடர்பான வழக்கும் இன்றுதான் விசாரணைக்கு வருகிறது.. இந்த வழக்குகள் விசாரணை தமிழக அரசியலில் பரபரப்பையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் கூட்டி வருகிறது..
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications