நிர்மலா சீதாராமன் பேசுவது போல ஏ.ஐ. வீடியோ.. பல லட்சங்களை இழந்த நீலகிரி தொழிலதிபர்கள்
ஊட்டி: இன்று ஏஐ தொழில் நுட்பம் தத்ரூபமாக வளர்ந்து நிற்கிறது. ஒரிஜினல் எது, போலி என்று தெரியாத அளவிற்கு ஏஐ வளர்ந்துவிட்டதால், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதாக இருக்கிறது. இதனை உணராமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற ஏ.ஐ. வீடியோவை நம்பி, நீலகிரி தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல் வீடியோக்களை அனுப்பி தொழில் அதிபர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்து வருகிறது. இதில் முதலீடு செய்தால் லாபம், அதில் முதலீடு செய்தால் லாபம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல் வீடியோ அனுப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள். அதனை அப்படியே நம்பி தொழில் அதிபர்கள் ஏமாந்து விடுகிறார்கள். அப்படித்தான் நீலகிரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 55 வயதான தொழிலதிபர், தேயிலை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல போலியாக தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வீடியோ அனுப்பப்பட்டுள்ளது.
அதில், குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல், நம்பிய தொழிலதிபர், குறிப்பிட்ட இணையதள முகவரியில் சென்று தனது விவரங்களை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு அழைப்பு வந்திருக்கிறது. அப்போது பேசிய நபர்கள், செயலி மூலம் முதலீடு செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார்களாம்.
இதையடுத்து கோத்தகிரி தொழிலதிபர் முதல் கட்டமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்தார். அப்போது அவருக்கு லாபமாக ரூ.47 ஆயிரம் வந்துள்ளது. இதை நம்பிய அவர், கூடுதலாக பணம் முதலீடு செய்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த பணத்தை எடுப்பதற்கு பல்வேறு காரணங்களை கூறி அவர்கள் கூடுதல் பணம் முதலீடு செய்ய வைத்தனர்.
மொத்தம் ரூ.7 லட்சம் முதலீடு செய்த பின்னர், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஆசாமிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவர்கள் அழைப்பை துண்டித்து விட்டார்கள். இதன் பின்னர் தொழிலதிபரால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நீலகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நீலகிரியை சேர்ந்த 60 வயதான மற்றொரு தொழிலதிபரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் முகநூல் மூலம் வந்த போலி வீடியோவை நம்பி ரூ.10 லட்சம் முதலீடு செய்து மோசடி ஆசாமிகளிடம் பணத்தை இழந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பணம் அனுப்பப்பட்ட குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணை முடக்கி நீலகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதாக வீடியோவை பார்த்து முதலீடு செய்ய வேண்டாம். நிதியமைச்சர் மட்டுமல்ல, நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என யார் பெயரில் வந்தாலும் முதலீடு செய்ய வேண்டாம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications