ஓடும் காரில் ஊட்டி பெண்ணுக்கு தாலி கட்டிய நீலகிரி ஹீரோ.. உடனே பெரிய ட்விஸ்ட்.. போலீஸே எதிர்பார்க்கல
ஊட்டி: பெண்ணை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்வது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவடு, வலுக்கட்டாயமாக தாலி கட்டுவது என அதிர்ச்சி சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.. அப்படித்தான் நேற்றைய தினமும் சத்தியமங்கலத்தில் ஒரு கடத்தல் சம்பவம் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. யாரிந்த பெண்? விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் என்ன? சுருக்கமாக பார்ப்போம்.
சமீபத்தில் மயிலாடுதுறையில் ஒரு கடத்தல் சம்பவம் நடந்தது.. விக்னேஸ்வரன் என்பவர், இளம்பெண்ணை, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்து கடத்தினார்..

காதலன் தன்னுடைய நண்பர்கள் 14 பேரை அழைத்து கொண்டு, பயங்கர ஆயுதங்களை கார்கள், பைக்குகளில் போட்டுக் கொண்டு, சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு கிளம்பினார்.. பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அவரை காரில் கடத்தினார்கள்..
ஓடும் காரில் தாலி கட்டி
அந்த பெண் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கத்தி கூச்சலிட்ட நிலையில், உடனே அவரது வாயை பொத்திவிட்டு, வேகமாக காரை ஓட்டிச்சென்றனர். அப்போது விக்னேஸ்வரன் அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், என் வாழ்க்கையையே இப்படி பாழக்கிட்டியே என்று தலையில் அடித்து கொண்டு அழுதார்..
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்திலும் அப்போது பரவியது.. இதை கண்ட மயிலாடுதுறை போலீசார், உடனே சம்பந்தப்பட்டவர்களை விரட்டி சென்றனர்.. ஆனால் வழியிலேயே விக்னேஸ்வரனுடன் வந்த 12 பேரும் தப்பி விட்டனர்... மிச்சம் 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்திருந்தது நினைவிருக்கலாம்.
நீலகிரி ஊட்டி பெண்
இதோ இப்போது நீலகிரி பெண்ணுக்கும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோலூர்மட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் மகேஸ்வரி.. இவருக்கு 20 வயதாகிறது.. இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற 25 வயது நபரை காதலித்து வந்திருக்கிறார்கள்..
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சோலூர்மட்டம் போலீஸில் புகார் தந்திருந்தனர்.. உடனே போலீசாரும் இரு வீட்டு பெற்றோர்களை அழைத்து பேசினார்கள்.. அப்போது மகேஸ்வரி மீண்டும் மனது மாறி தன்னுடைய பெற்றோருடன் செல்ல சம்மதித்தார்.
மகேஸ்வரிக்கு தாலி கட்டி
இதையடுத்து அவரது பெற்றோர் தாளவாடியில் உள்ள உறவினர் வீட்டில் மகேஸ்வரியை தங்க வைத்தனர்.. நாட்கள் செல்ல செல்ல மகேஸ்வரியும் காதலனை மறக்க துவங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று, தாளவாடியில் இருந்த மகேஸ்வரியை அவரது தந்தை ஊருக்கு அழைத்து செல்வதாக நேற்று காலை பண்ணாரி அம்மன் கோயில் பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது மகேஸ்வரியிடம் கார் ஒன்று திடீரென நெருங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்து இறங்கியவர்கள் மகேஸ்வரியை இழுத்து உள்ளே தள்ளி விட்டு வேகமாக புறப்பட்டனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் உடனடியாக காரை துரத்தினார்கள்..
புது குய்யனூர் அருகே காரை தடுத்து நிறுத்திய போது காரை ஒட்டிச்சென்ற நபர் மரத்தில் மோதி நிறுத்தினார்... இதனால் சம்பவ இடமே ஒரு கணம் பதற்றத்தில் மூழ்கியது. ஆத்திரமடைந்த அங்கிருந்த பொதுமக்கள், காரில் இருந்தவர்களை பிடித்து தாக்கினார்கள்.. அதற்குள் தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்..
விசாரணையில் ட்விஸ்ட்
அப்போதுதான் விசாரணையில் பல தகவல்கள் வெளியாயின,.. அதாவது இந்த கடத்தல் நாடகத்தை நடத்த சொன்னதே மகேஸ்வரிதானாம்..
தாளவாடியில் இருந்து ஊருக்கு செல்லும் தகவலை மணிகண்டனுக்கு செல்போன் மூலம் சொல்லியிருக்கிறார்.. பண்ணாரி அருகே அப்பாவுடன் நின்றிருக்கும்போது, தன்னை காரில் வைத்து கடத்தும்படி சொன்னாராம்.. அன்படியே மகேஸ்வரியை மணிகண்டன் காரில் கடத்தி, அவருக்கு காரிலேயே தாலி கட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மகேஸ்வரி, தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, தன்னுடைய காதலனுடன் செல்ல விரும்புவதாக போலீசாரிடம் சொன்னார்.. பிறகு போலீசாரும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இந்த கடத்தல் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது..
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications