இம்முறையும் ஊட்டி மலர் கண்காட்சி ரத்து.. வீட்டிலிருந்தே மலர் அலங்காரங்களை ஆன்லைன் மூலம் காண ஏற்பாடு
ஊட்டி மலர்க்கண்காட்சி இந்த முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது
ஊட்டி: தொற்று பரவல் அதிகமாக இருக்கவும், 2-வது ஆண்டாக ஊட்டியில் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், அங்கு செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சிக்கான 293 ரகங்களை சேர்ந்த 5 லட்சம் செடிகள் நடவு செய்யப்பட்டதோடு, 25 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இதை ஆன்லைனில் பார்வையிட வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டியில் எப்போதுமே வருடந்தோறும் மலர்க்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.. இதை காண வெளிநாடு, உள்நாடு, பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் ஊட்டிக்கு சீசனில் குவிவது வழக்கம்.

அலங்காரங்கள்
ஆனால், கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கவும், முழு லாக்டவுடன் போடப்பட்டுவிட்டது.. இதனால், சீசனில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.. எனவே இந்த வருடமாவது மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதனால், கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தயாரானது.. மலர்கள் வைத்து அலங்காரங்கள் செய்யும் பணியும் துவங்கியது..

ரத்து
ஆனால், இப்போதும் பரவல் அதிகமாக இருக்கவும், 2-வது ஆண்டாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், அங்கு செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கூகுள் டிரைவில் தாவரவியல் பூங்கா-2021 என உள்ளீடு செய்து ட்ரோன் கேமரா மூலம் பூங்காவின் இயற்கை எழில் மிகுந்த காட்சி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மலர் அலங்காரம், கண்ணாடி மாளிகை போன்றவற்றை 5 நிமிட வீடியோவாக பார்க்கலாம்.

மலர்க்கண்காட்சி
இதற்கான திட்டத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சிக்கான 293 ரகங்களை சேர்ந்த 5 லட்சம் செடிகள் நடவு செய்யப்பட்டதோடு, 25 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தது...

ஆஸ்பத்திரி
இதை ஆன்லைனில் பார்வையிட வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்... தமிழகத்தில் கூடுதலாக டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்படுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications