சயான், மனோஜ் ஜாமீன் அதிரடி ரத்து.. ஊட்டி கோர்ட் உத்தரவு
Recommended Video

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் மனோஜ், சயான் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து ஊட்டி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து விட்டு விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இதில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

ஊட்டி கோர்ட்
ஆனால் இவர்கள் 2 பேரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆஜரானார்கள்
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை சயான், மனோஜ் இருவரையும் கடந்த 29-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படியே இருவரும் அன்றைய தேதியில் ஆஜரானார்கள்.

10 குற்றவாளிகள்
அப்போது, நடந்து முடிந்த வாதத்திற்கு பிறகு வழக்கை வரும் 8ம் தேதிக்கு அதாவது இன்றைய தேதிக்கு நீதிபதி வடமலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும் கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

4 பேர் வரவில்லை
இந்நிலையில் மனோஜ், சயான் இருவருடனும் 10 குற்றவாளிகளும் இன்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதால், காலையிலேயே வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் 10 குற்றவாளிகளில் ஜம்சீர் அலி, உதயக்குமார், சந்தோஷ்சாமி, மனோஜ், ஜித்தின் ஜாய், சதீசன் என்கிற 6 பேர்தான் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

ஜாமீன் ரத்து
சயான், மனோஜ் இருவருமே ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரின் ஜாமீனை ரத்து செய்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அன்று வந்தால் இருவரும் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications