கூடலூர் அருகே பள்ளத்தில் உருண்டோடிய வேன்.. சுற்றுலா சென்ற 22 பேர் காயம்! கயிறு கட்டி மீட்பு!
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தவளமலை பகுதியில் பள்ளத்தில் உருண்டோடி வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் இருந்து உதகை வழியாக கூடலூர் சென்ற வேன், தவளமலை பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானது. இதனை அறிந்த அவ்வழியாகச் சென்ற நபர்கள் உடனடியாக 108க்கு தகவல் அளித்தனர்.

விபத்தில் சிக்கிய வேனில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்டு தீயணைப்பு துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications