என்னை தாண்டி போய்டுவீங்களா.. பஸ்சை வழிமறித்த யானை.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த பயணிகள்!
Recommended Video
நீலகிரி: நீலகிாி மாவட்டம் மஞ்சூா் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால், 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்திற்கு உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். மேலும் வாகனங்களை கவனமுடன் இயக்க வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினா் எச்சாிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிாி மாவட்டம் மஞ்சூாிலிருந்து கோவைக்கு செல்லும் மலைபாதையில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து வருகின்றன.

இந்நிலையில் கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை பெரும்பள்ளம் என்ற இடத்தில் காட்டுயானை ஒன்று சாலையை மறித்தபடி நின்று கொண்டிருந்தது. யானையை கண்டவுடன் ஒட்டுநா், பேருந்தை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினாா்.
இதேபோல் மஞ்சூாிலிருந்து கோவைக்கு சென்ற வாகனங்களும் காட்டு யானை சாலையில் நின்றதால், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தினா். சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் நடுவே நின்றிருந்தது.
இதனால் பேருந்திற்கு உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். பஸ்சுக்குள் இருந்தபடியே யானையை வீடியோ எடுப்பதும், அது எப்படா இடத்தைக் காலிச் செய்யும் என்றும் பயணிகள் காத்துக் கிடந்தனர். நீண்ட நேர விளையாட்டுக்குப் பின்னா் யானை மெதுவாக நடந்துசென்று காட்டுப் பகுதிக்குள் போனது. அதன் பிறகே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
தற்போது காட்டுயானைகள் அதிகளவில் வனப்பகுதியை விட்டு சாலைகளில் வருவதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்றும், யாரும் வாகனங்களைவிட்டு கீழே இறங்கி புகைப்படம் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என வனத்துறையினா் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications