கொரோனா 2-வது அலை- பிரான்சில் மீண்டும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்!
பாரீஸ்: பிரான்சில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் மருத்துவ - பொதுசுகாதார அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

மார்ச்சில் அவசர நிலை
பிரான்சில் கடந்த மார்ச் மாதம் இந்த மருத்துவ அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த அவசரநிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3,86,35,123 ஆக உயர்ந்துள்ளது. உலகில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,94,311 ஆகவும் அதிகரித்திருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,90,12,215 ஆக உள்ளது.

2-வது கொரோனா அலை
இதனிடையே ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. பிரான்ஸில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 22,591, ஸ்பெயினில் 11,970, இங்கிலாந்தில் 19,724 ஆக உள்ளது. இது கொரோனா 2-வது அலை என அழைக்கப்படுகிறது.

பிரான்ஸில் மீண்டும் அவசரநிலை
இதையடுத்து பிரான்ஸ் அரசு மீண்டும் மருத்துவ அவசரநிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சனிக்கிழமை முதல் அடுத்து வரும் 4 வாரங்களுக்கு அமலில் இருக்கும் எனவும் அந்த நாட்டு அதிபர் மெக்ரோன் அறிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications