காஷ்மீர் விவகாரத்தில் பின்வாங்கிய டொனால்ட் ட்ரம்ப்.. இந்திய உறுதிக்கு கிடைத்தது வெற்றி
Recommended Video
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று நிகழ்ந்தது.
இந்த முறை ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் பங்கேற்றுள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே, சமரசம் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், மோடியுடனான அவரது சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
பேச்சுவார்த்தைக்கு இடையில் மூன்றாவது நாட்டுக்கு இடமில்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா இன்று ஏற்றுக்கொண்டதை, ட்ரம்ப் உறுதி செய்தார்.
இரு தலைவர்களும் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார். இதன் மூலம், காஷ்மீர் விவகாரத்தில், மூக்கை நுழைக்கப்போவதில்லை என்பதை ட்ரம்ப் உறுதி செய்துள்ளார். இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் இந்தியாவுடன் அதிக வர்த்தகத்தை செய்கிறோம். இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு சாதனை அளவாக அதிகரித்துள்ளது என்றார்.
இந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடி கூறுகையில், அமெரிக்காவுடன் இணைந்து பல துறைகளிலும் பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றதும் நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். தீவிரவாதம், ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியா தனது ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்திருந்தேன்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு இயல்புடையவை, வேறு எந்த நாட்டின் உதவியையும் நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் 1947ம் ஆண்டுக்கு, முன்னர் ஒரு நாடாக இருந்தன. நாங்கள் தீர்வுகளை எட்டுவோம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications