அனல் பறக்கும் தேர்தல் களம்:பீகாரில் முதல் கட்டமாக இன்று 71 தொகுதிகளில் வாக்கு பதிவு-பலத்த பாதுகாப்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முதல் கட்டமாக 71 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், விரிவான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 2,3வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
முதல் கட்டமாக இன்று 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க 1,000 பேர் முதல் 1,600 பேர் வரையிலான வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு சாவடிகளில் தெர்மல் ஸ்கேனர், கையுறைகள், முக கவசங்கள், சோப் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டுள்ளன.

71 தொகுதிகளில் வாக்குப் பதிவு
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ 35 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 29, ஆர்ஜேடி 42, காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியானது மொத்தம் 41 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

களத்தில் ஷ்ரேயாசி சிங்
காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற ஷ்ரேயாசி சிங் நாளை தேர்தல் நடைபெறும் ஜமுய் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். ஷ்ரேயாசி சிங்குக்கு ஆதரவு தருவதாக சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஏற்கனவே அறிவித்துள்ளது. ஷ்ரேயாசி சிங்கை எதிர்த்து ஆர்ஜேடி வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. விஜய் பிரகாஷ் யாதவ் போட்டியிடுகிறார். லாலு பிரசாத்தின் நெருங்கிய நண்பரான முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவின் சகோதரர் விஜய் பிரகாஷ் யாதவ்.

114 பெண்கள் உட்பட 1066 பேர் போட்டி
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவின் மகளான 28 வயது திவ்யா பிரகாஷூம் இம்முறஇ தாராபூர் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளராக களத்தில் இருக்கிறார். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 6 அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 1066 பேர் வேட்பாளர்கள் இவர்களில் 114 பேர் பெண்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் மாவட்டங்களில் கயா, ரோஹ்தாஸ் மற்றும் அவுரங்காபாத் ஆகியவை மாவோயிஸ்டுகள் செல்வாக்குமிக்கவை. ஆகையால் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications