பீகாரில் அடுத்து என்டிஏவா? இந்தியாவா? நாளை வாக்கு எண்ணிக்கை! 501 கிலோ லட்டுவை ஆர்டர் செய்த பாஜக!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் இரு கட்டங்களாக நடத்தப்பட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நிறைவடைந்த நிலையில், நாளை (நவம்பர் 14) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இரு கட்ட வாக்குப்பதிவிலும் சேர்த்து சுமார் 66.9 சதவீதம் வாக்குப்பதிவை பதிவு செய்து பீகார் மக்கள் வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், ஆட்சிமையக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மொத்தம் 243 தொகுதிகளை கொண்டுள்ள பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (NDA) மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் (INDIA Bloc) இடையே கடுமையான போட்டி இருந்தது.

தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பா.ஜ.க. முக்கிய கூட்டணிக் கட்சிகளாக உள்ளன. அதே நேரம் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான INDIA கூட்டணி மிகப்பெரிய கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.
பீகார் தேர்தல் முடிவு
தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6-ம் தேதி மற்றும் நவம்பர் 11-ம் தேதி நடைபெற்றது; முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் 65 சதவீதம் வரை தொட்டது. அதன்பின், இரண்டாம் கட்டத்திலேயே மேலும் வாக்குகள் அதிகமாக பதிவு ஆகி, 122 தொகுதிகளில் 68.8 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியது. இந்தத் தேர்வின் விசேஷம் என்னவென்றால், பெண்கள் வாக்குப்பதிவு விகிதம் குறிப்பிடத்தக்கது அளவு உயர்ந்துள்ளது தான். பொதுவாக வாக்களிக்க எண்ணமில்லாமலும், அரசியல் காரணங்களாலும் பீகார் வழக்கமாக குறைந்த அளவிலேயே பெண்கள் வாக்களிப்பார்கள்.
வாக்கு சதவீதம்
ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக பீகாரில் பெண்கள் 71.6 பேர் சதவீதம் வாக்களித்துள்ளனர். ஆண்கள் வாக்குப்பதிவு சதவீதம் 62.8 ஆகவுள்ளது. பிரச்சாரம், கிராமப்புற-நகர்ப்புற ஓட்டு வேற்றுமைகள், மற்றும் கட்சித் வாக்குறுதிகள் காரணமாக பெண்கள் அதிகளவு வாக்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் எண்ணிக்க மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு மையங்களில் துணைப் ராணுவ வீரர்கள், உள்ளூர் காவல்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, நேபாள எல்லை அருகிலுள்ள மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்
இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சுட்டிக்காட்டுகின்றன. மொத்தம் 243 இடங்களில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ கூட்டணிக்கு 140க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா? அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியமைக்குமா? என்பது பகல் 12 மணிக்கெல்லாம் தெளிவாக தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக - ஜேடியூ
அதே நேரத்தில், தேர்தல் முடிவை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர். குறிப்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால், பாஜகவும் கூட்டணி கட்சிகளும் உற்சாகத்தில் உள்ளனர். பாட்னாவில் வெற்றிக்குப் பிறகு தொண்டர்களுக்கு வழங்க 501 கிலோ லட்டுவை பாஜகவினர் ஆர்டர் செய்துள்ளதே இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எதிர்கால பீகார் மாநிலத்தின் அரசியல் நிலவரம் எப்படி மாறுமோ, அதற்கான முதல் அறிகுறிகள் நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தெரிந்துவிடும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications