பீகார் தேர்தல்:10% வாக்குகளுடன் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கப் போகிறார்களா 3-வது அணி கட்சிகள்?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 10% வாக்குகளுடன் 3-வது அணி கட்சிகள் தீர்மானிக்கும் சக்தியாகவும் உருவெடுக்கவும் வாய்ப்புள்ளன என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
பீகாரில் 71 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. நவம்பர் 3, நவம்பர் 7-ல் 2வது, 3-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 10-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அணிகள் மாறுமா?
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருந்தபோதும் தேர்தலுக்குப் பின்னர் ஜேடியூ-ஆர்ஜேடி, காங்கிரஸ்- இடதுசாரிகள் புதிய கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

3வது அணி கட்சிகள்
பீகார் தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டசபை உருவாகுமானால் 3-வது அணியாக மொத்தம் 6 கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கவே வாய்ப்பிருக்கின்றன. இந்த 3-வது அணி கட்சிகள் மொத்தம் 10% வாக்குகளை தங்கள் வசம் வைத்திருக்கிறது.

கடந்த கால நிலவரம்
2015 தேர்தலில் ஆர்.எல்.எஸ்.பி. 3.6% வாக்குகளுடன் 2 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 2% வாக்குகளைப் பெற்றது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. ஆர்.எல்.எஸ்.பி 104 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி 80 தொகுதிகளிலும் மஜ்லிஸ் கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

பீகாரில் உபி கட்சிகள்
உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்தும் கட்சிகள் பீகாரில் தலைதூக்க முயற்சிப்பது வழக்கம். இந்த தலைவர்களின் முயற்சிகள் சில நேரங்களில் லேசான தாக்கத்தை பீகாரில் ஏற்படுத்துவதும் உண்டு. அப்படி இம்முறையும் ஏற்படுத்தினால் அவர்கள் பக்கம் காற்று வீசவும் வாய்ப்பிருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications