பீகார் தேர்தல்:10% வாக்குகளுடன் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கப் போகிறார்களா 3-வது அணி கட்சிகள்?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 10% வாக்குகளுடன் 3-வது அணி கட்சிகள் தீர்மானிக்கும் சக்தியாகவும் உருவெடுக்கவும் வாய்ப்புள்ளன என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
பீகாரில் 71 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. நவம்பர் 3, நவம்பர் 7-ல் 2வது, 3-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 10-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அணிகள் மாறுமா?
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருந்தபோதும் தேர்தலுக்குப் பின்னர் ஜேடியூ-ஆர்ஜேடி, காங்கிரஸ்- இடதுசாரிகள் புதிய கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

3வது அணி கட்சிகள்
பீகார் தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டசபை உருவாகுமானால் 3-வது அணியாக மொத்தம் 6 கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கவே வாய்ப்பிருக்கின்றன. இந்த 3-வது அணி கட்சிகள் மொத்தம் 10% வாக்குகளை தங்கள் வசம் வைத்திருக்கிறது.

கடந்த கால நிலவரம்
2015 தேர்தலில் ஆர்.எல்.எஸ்.பி. 3.6% வாக்குகளுடன் 2 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 2% வாக்குகளைப் பெற்றது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. ஆர்.எல்.எஸ்.பி 104 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி 80 தொகுதிகளிலும் மஜ்லிஸ் கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

பீகாரில் உபி கட்சிகள்
உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்தும் கட்சிகள் பீகாரில் தலைதூக்க முயற்சிப்பது வழக்கம். இந்த தலைவர்களின் முயற்சிகள் சில நேரங்களில் லேசான தாக்கத்தை பீகாரில் ஏற்படுத்துவதும் உண்டு. அப்படி இம்முறையும் ஏற்படுத்தினால் அவர்கள் பக்கம் காற்று வீசவும் வாய்ப்பிருக்கிறது.
-
கண்ட்ரோலை எடுக்கும் பாஜக! ஒரு காலத்தில் பீகாரில் மோடியை.. கால் வைக்க விடாத நிதிஷுக்கு நேர்ந்த கதி! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு












Click it and Unblock the Notifications