பீகாரில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு ஜெயில்.. ஜாமினில் வரமுடியாது
பாட்னா: வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பீகார் முதல்வர் நீதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் வளர்ந்து பெரிய பிள்ளைகள் ஆன பின்னர் தங்களது வயதான பெற்றோரை பார்த்துக் கொள்வது இல்லை. இதனால் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உதவி மற்றும் ஆதரவு இல்லாமல் மிகவும் வேதனையுடன் தங்கள்து மீதி காலத்தை கழிக்கும் அவல நிலை இந்தியா முழுவதுமே காணப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசுகள் எத்தனையோ முயற்சிகள் செய்து வருகின்றன. ஆனால் தீர்வு தான் இல்லை.

ஏனெனில் சம்பாதிக்கும் பணம் தனக்கும் தன் பிள்ளைக்கும் மட்டுமே போதவில்லை என மனநிலையுடன் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். இதேபோல் மருமகள்களும் இருக்கிறார்கள். இதன்காரணமாக ஆதரவு இல்லாமல் வயதான பெற்றோர்கள் தனித்துவிடப்படும் அவலம் தொடர்கிறது.
சம்பாதித்து படிக்க வைத்து, பிள்ளைகள் தான் பெரிது என அவர்களுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும் பெற்றோர் கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இதை தடுக்க பீகார் மாநில அரசு புதிய சட்டம் கொண்டுவருகிறது. பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு சிறைதண்டனை அளிக்க வகை செய்யும் மசோதவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சகம் உருவாக்கியிருந்த மசோதாவின் படி இனி வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். வயதான பெற்றோர் புகார் அளித்தால் பிள்ளைகள் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
தமிழகத்திலும் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் சிறை தண்டன அல்லது அபாராதம் அல்லது இரண்டும் விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. வயதான பெற்றோரை பாதுகாக்க மத்திய அரசும் சட்டம் இயற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications