இவருதான் பீகார் சுயேட்சை எம்எல்ஏ.. வீட்டில் என்னா வச்சிருந்தாரு தெரியுமா.. இப்ப திமிர் பேச்சு வேற
பாட்னா: வீட்டில் ஏகே 47 துப்பாக்கி வைத்து இருந்த பீகார் சுயேட்சை எம்எல்ஏ அனந்த் குமார் சிங், போலீஸ் கைது பண்றதற்கு எல்லாம் தான் பயப்படவில்லை என்றும், 3 அல்லது 4 நாளில் சரண் அடைவேன் என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி கான்ட்ராக்டர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இதன்படி பீகார் மோகாமா தொகுதி சுயேட்சை எம்எல்ஏ அனந்த் குமார் சிங்கின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் மறைத்து வைத்திருந்த சட்டவிரோத பயங்கர ஆயுதமான ஏகே 47 துப்பாக்கியை கைப்பற்றினர்.

இது தொடர்பாக அவரதுமனைவியிடம் நடத்திய விசாரணையில் சரியான தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து சுயேட்சை எம்எல்ஏவை அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால் எம்எல்ஏ அனந்த் குமார் சிங் திடீரென தலைமறைவாகினார்.
இதையடுத்து அவர் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடிவருகிறார். இந்த சூழலில் எம்எல்ஏ அனந்த் குமார் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "போலீசாரின் கைது நடவடிக்கைக்கு நான் பயப்படவில்லை. 3 அல்லது நான்கு நாளில் நானே சரண் அடைகிறேன். ஏகே47 துப்பாக்கியை போலீசார் எடுத்த வீட்டில் நான் 14 வருடங்களாக போனதே இல்லை.இந்த விஷயத்தில் முதல்வர் நிதீஷ்குமாரிடம் பேச உள்ளேன். ஆனால் அதற்கு தற்போது நேரம் இல்லை. நான் நீதிமன்றத்தில் விரைவில் சரண் அடைவேன் " இவ்வாறு கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications