அரசுக்கு எதிரான கருத்தா... கம்பிதான்.. களிதான்.. நிதீஷ் குமார் வார்னிங்!
பாட்னா : அரசு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும், அவதூறாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் சிறை தண்டனை உறுதி என பீகார் அரசு அறிவித்துள்ளது. இணையதள விமர்சனங்களை கட்டுப்படுத்தும் சைபர்கிரைம் பிரிவு உத்தரவில் முதல்வர் நிதிஷ்குமார் கையெழுத்திட்டுள்ளார்.
இணையதள குற்றங்களை கண்காணித்து, கடுமையாக நடவடிக்கை எடுக்கும் மிக அரிதான மாநிலங்களில் பீகாரும் ஒன்று. அந்த வகையில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி நய்யர் ஹஸ்னைன் கான், மாநிலத்தின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில், சமூக வலைதளங்களில் சில நபர்கள் மற்றும் அமைப்புகள் அரசு, அதன் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தவறான மற்றும் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் சைபர் குற்றப்பிரிவின் கீழ் வருகிறது. இது போன்ற குற்றங்களை தடுத்து, சட்டத்தின் கீழ் கொண்டு வர அனைத்து அதிகாரிகளும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான தகவல்களை அளிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
ஏற்கனவே பொது கூட்டங்கள் மற்றும் கட்சி கூட்டங்களில் தனது அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக நிதிஷ்குமார் தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது ஐஜி எழுதி உள்ள கடிதம் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.
ஐஜி.,யின் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் தான் ஊழல் மற்றும் குற்றவாளிகளை பாதுகாக்கும் பிதாமகராக உள்ளார். இந்த கருத்திற்காக முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications