நான் சாகவேண்டும் என பில்லி சூனியம் செய்த லாலு பிரசாத்.. பாஜக சுஷில் மோடி புகாருக்கு தேஜஸ்வி மறுப்பு
பாட்னா: தாம் மரணிக்க வேண்டும் என்பதற்காக பில்லி சூனியம் செய்தவர் லாலு பிரசாத் யாதவ் என பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி கூறிய புகாரை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. பீகாரில் முதல் கட்டமாக வரும் 28-ந் தேதியும் 2-வது கட்டமாக நவம்பர் 3, 3-வது கட்டமாக நவம்பர் 7-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகார் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் ஜேடியூ-பாஜக அணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என கூறப்படுகிறது.

லாலு வைத்த சூனியம்
அதேநேரத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கட்சிகளின் நிலைப்பாடுகள் மாறக் கூடும்; புதிய திருப்பங்கள் வரும் என பூடகமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பீகார் துணை முதல்வரான பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி பிரசார கூட்டம் ஒன்றில் பேசுகையில், நான் இறந்துவிட வேண்டும் என்பதற்காக லாலு பிரசாத் எனக்கு எதிராக மந்திர தந்திரங்கள் செய்தார் என கூறியிருந்தார். இதனை லாலு பிரசாத்தின் மகனும் ஆர்ஜேடி-காங். கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் மறுத்துள்ளார்.

தேஜஸ்வி மறுப்பு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேஜஸ்வி யாதவ், சுஷில் மோடியிடம் இருந்து இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கருத்துகளை நான் எதிர்பார்க்கவில்லை. வேலைவாய்ப்பு, தொழில்வளம், கல்வி, சுகாதாரம் குறித்துதான் சுஷில் மோடி பேச வேண்டும்.

15 வருஷமாக என்ன செய்தீங்க?
கடந்த 15 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத்தான் மக்களுக்கு விளக்க வேண்டும். அதை எல்லாம் விட்டுவிட்டு இப்படி மூடநம்பிக்கையை பரப்புகிற விஷயங்களை பேசுவதில் அர்த்தம் எதுவும் இல்லை.

வேட்பாளர் சுட்டுக் கொலை- கண்டனம்
சியோஹரில் வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குரியது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இச்சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications