தேர்தலுக்கு பின் ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி அமையும்- ஓட்டு போடும் முன் திரி கொளுத்திய சிராக் பாஸ்வான்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகி ஆர்ஜேடியுடன் ஜேடியூ கை கோர்க்கும் என்று முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

பீகாரில் 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Vote to Nitish Kumar strenghten RJD- Cong. alliance: Chirag Pasawan

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றைய வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் கடந்த தேர்தலில் ஆர்ஜேடி-ஜேடியூ இணைந்து வென்றவையே அதிகம். பாஜகவுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லாத தொகுதிகள்.

இந்த நிலையில் இன்று காலையில் முதல் கட்ட வாக்குப் பதிவு டொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தமது ட்விட்டர் பக்கத்தில், தேர்தலுக்குப் பின்னர் ஜேடியூவும் ஆர்ஜேடியும் கூட்டணி அமைத்துவிடும். ஜேடியூவுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் பீகாரை நாசமாக்கிவிடும். அது ஆர்ஜேடி-காங்கிரஸ் அணியை வலிமையாக்கும் என கொளுத்திப் போட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+