ஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்று பா ஜ க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான மேற்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,

By - election may Come to Tuticorin constituency, Tamilisai predicted

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவும் குழப்பத்துக்கு காரணம், அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தான் என்றார். காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் அவர் தலைமை மீது நம்பிக்கை இழந்து, அக்கட்சியினர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இதில், பா ஜ கவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.

மேலும், பேசிய அவர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். அத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி வேட்புமனுவில், தனது கணவர், மகன் ஆகியோரது வருவாய், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.

தேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதே நேரம், 2 ஜி வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இரு வழக்குகளின் விசாரணையின் முடிவில் தூத்துக்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று கணிப்பு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+