"இசை முரசு" நாகூர் அனிபாவின் நூற்றாண்டு விழாவில் புத்தகம் வெளியீடு!
பெரம்பலூர்: பெரம்பலூரில் நாகூர் அனிபா நூற்றாண்டு விழா மற்றும் கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பிரதியை சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது வெளியிட, பெரம்பலூர் தொழிலதிபர் எஸ் எஸ் நிறுவனத்தின் தலைவர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
அரும்பாவூர் இலக்கிய சாரல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, கருத்தரங்கு, கவியரங்கம் மற்றும் ஆய்வரங்கம் என மூன்று நிகழ்வுகளாக நடந்தன.

முதல் நிகழ்ச்சியாக, நாகூர் அனிபா குறித்த கருத்தரங்கு பேராசிரியர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் கி.மகேந்திரன், எழுத்தாளர் வி.களத்தூர் கமால் பாஷா, பேராசிரியர் ஞானசேகரன் பேராசிரியர் மூர்த்தி, ஆசிரியர் சிலம்பரசன், கவிஞர் ச.மோகன், சனா பாருக் ஆகியோர் உரையாற்றினர்.
இரண்டாம் அமர்வாக, நாகூர் அனிபா குறித்த கவியரங்கம் நடைபெற்றது. இந்த கவியரங்கம் கவிஞர் அகவி தலைமையில் நடைபெற்றது. கவிஞர் இளங்குமரன், கவிஞர் நிழலி, கவிஞர் முத்துமாறன், கவிஞர் இராமர், செந்தமிழ் வேந்தன் ஆகியோர் நாகூர் அனிபாவின் பாடல்களில் இஸ்லாம், அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கவி பாடினர்.
அடுத்ததாக, அரும்பாவூர் சமூக ஆர்வலர் தாகிர் பாஷா எழுதிய "வாழத் தகுதியற்ற நகரத்தின் தடங்கள்" என்ற தலைப்பிலான கவிதை நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது வெளியிட, பெரம்பலூர் தொழிலதிபர் எஸ் எஸ் நிறுவனத்தின் தலைவர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
நூல் குறித்து எழுத்தாளர் ஸ்ரீமதி, எழுத்தாளர் செயபால் ரத்தினம், பெரம்பலூர் இரா.எட்வின் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்நிகழ்விற்கு பேராசிரியர் தமிழ்மாறன் தலைமை வகித்தார் நிகழ்ச்சியின் இறுதியில் நூல் குறித்தும் அதனுடைய தாக்கம் குறித்தும் சட்டசபை உறுப்பினர் அப்துல் சமது விரிவாக பேசினார்.
நூல் ஆசிரியர் அரும்பாவூர் தாஹிர் பாஷா ஏற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை சாஹிரா தாஹிர் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியானது செந்தில்குமார் நன்றியுரையுடன் நிறைவுற்றது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications