பெரம்பலூரில் அமைச்சர் காரை நிறுத்தி கோரிக்கை வைத்த மாணவர்கள்.. அதிகாரிகளுக்கு உடனடியாக பறந்த உத்தரவு
பெரம்பலூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம், பரப்புரை ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திட்டமிட்ட பணிகள், நிறைவேற்றாமல் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர், எழுமூர் பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் காரைப் பார்த்த மாணவர்கள் சிலர் கை காட்டி நிறுத்தி பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காரில் சென்ற அமைச்சர்
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளன. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு திட்டங்கள் அனைத்தையும் விரைந்து நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், புதிய மற்றும் நிறைவடைந்த பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். எழுமூர் கிராமம் வழியாக அமைச்சர் தனது காரில் சென்றுள்ளார்.
அமைச்சரிடம் பேருந்து வசதி கோரிய மாணவர்
அப்போது, பள்ளி முடிந்து மாணவர்கள் அவ்வழியாகச் சென்றுள்ளனர். அமைச்சர் கார் செல்வதைப் பார்த்த மாணவர் ஒருவர் திடீரென கைகாட்டி காரை நிறுத்தக் கோரியுள்ளார். இதைப் பார்த்த அமைச்சர் சிவசங்கர் காரில் இருந்து இறங்கி வந்து மாணவர்களிடம் பேசியுள்ளார். அப்போது அந்த மாணவர், ஆயக்குடிக்கு நேரடியாக செல்வதற்கு பேருந்து வசதி இல்லை. அப்பகுதிக்குச் சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து, அமைச்சர் சிவசங்கர் உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரை அழைத்து, ஆயக்குடி வழித்தடத்தில் பேருந்து இயக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, மாணவர்களிடம் பேசிய அமைச்சர் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications