திடீரென மனைவி மரணம்.. இறந்ததை மறைத்து மகள் திருமணத்தை நடத்திய தந்தை.. புதுச்சேரியில் உருக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனுாரில் திருமணத்திற்கு முதல் நாள் மனைவி உடல் நலக்குறைவால் இறந்த நிலையில், மனைவி இறந்ததை மறைத்து மகள் திருமணத்தை தந்தை திட்டமிட்டபடி நடத்தி இருக்கிறார். இந்தசம்பவம் புதுச்சேரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் என்பது வாழ்வில் ஒருமுறை தான். அதனை அம்மா, அப்பா, நண்பர்கள், உறவினர்கள் சூழ வாழ்த்து பெற்று மகிழ்வோடு செய்ய வேண்டிய நிகழ்வு. இந்த அற்புதமான நாள் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்நாள் முழுவதும் நினைவுகளாக இருக்கும். மகன் அல்லது மகளின் திருமண நாள் என்பது பெற்றோருக்கும் பெரும் கனவு நாளாக இருக்கும்.

அப்படியான இனிமையான நாளில் தாயை மணப்பெண் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு துயரமான சம்பவம் புதுச்சேரி வில்லியனூரில் நடந்துள்ளது. இந்நிலையில் தன் மனைவி இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணத்தை நடத்தி உள்ளார் தந்தை.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
புதுச்சேரி வில்லியனுார் அடுத்த ஏம்பலம் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் கூலித்தொழிலாளியாவர். இவரது மனைவி அரசம்மாளுக்கு 50 வயது ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்ய தண்டபாணி ஏற்பாடு செய்திருந்தார்.
நல்லாத்துாரில் நேற்று (ஞாயிறு) தண்டபாணி தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். திருமணத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன. சனிக்கிழமை காலை மணமகளுக்கு சடங்கு செய்வதற்காக வீட்டின் அருகே உள்ள உறவினர்களை அழைக்க அரசம்மாள் நடந்து சென்றிருக்கிறார்
அப்போது அவர் மயங்கி விழுந்து இறந்தார். அரசம்மாள் உடல் கதிர்காமம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காக மனைவி உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையிலேயே வைத்திருக்க தண்டபாணி கேட்டுக் கொண்டார்.
மனைவி இறந்ததை உறவினர்களுக்கு கூட தெரியப்படுத்தாமல் திட்டமிட்டபடி திருமணத்தை நேற்று தண்டபாணி நடத்தி முடித்தார். இன்று அரசம்மாள் உடல் பிரேத பரிசோதனை செய்து ஒப்டைக்கப்படுகிறது. வீட்டில் மகள் திருமணத்திற்காக அமைத்த பந்தலிலேயே மனைவிக்கு இறுதி சடங்கினை தண்டபாணி செய்கிறார்.இந்த சம்பவம் புதுச்சேரி வில்லியனூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications