தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பிஸ்கெட் வழங்கி காலில் விழுந்து நன்றி தெரிவித்த பாஜகவினர்!
புதுச்சேரி: தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பிஸ்கெட் மற்றும் முககவசம் வழங்கி அவர்களின் காலில் விழுந்து உப்பளம் பகுதியில் பாஜகவினர் நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மேலும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.
தற்போது 3 பேர் மட்டுமே இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் , பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் காலகட்டத்தில் தங்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இந்த தேசத்திற்காகவும் பொது மக்களின் சுகாதாரத்திற்காகவும் சுகாதாதாரத்துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.
அப்படி உப்பளம் தொகுதியில் பணி செய்து வரும் 70-தூய்மை பணியாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் உப்பளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோபி என்ற சிவராஜ் தலைமையில் பாஜகவினர் அரிசி ,காய்கறிகள், பிஸ்கட் மற்றும் முக கவசம் வழங்கினார்கள் மேலும் அவர்களில் காலில் விழுந்து நன்றி தெரிவத்தனர்.