கொரோனா எதிரொலி.. புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை.. நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கு நாளை முதல் வருகின்ற 31 ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் வருவதற்கு தடை விதித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒன் இந்தியா தமிழுக்கு புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி அளித்த பிரத்தியேக பேட்டியில், கொரோனா வைரஸ் அறிகுறி இந்தியாவில் தென்பட்டதிலிருந்து மத்திய அரசு புதுச்சேரி அரசை தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

புதுச்சேரி அரசும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. வருகின்ற 31 ஆம் தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா தலங்களும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர். அதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு நாளை முதல் வருகின்ற 31 வரை வெளிமாநில வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விளக்கு அளிக்கப்படுகிறது. கொரோனாவின் தீவிரத்தை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications