புதுச்சேரியில் மேகவெடிப்பு அபாயம்! தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
புதுச்சேரி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னையில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்திருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு புதுச்சேரியில் மேகவெடிப்பு அபாயம் ஏற்பட இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றிரவு சென்னையில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல இடங்களில் ஒரு மணிநேரத்திற்குள் 100 மி.மீக்கும் அதிமாக மழை பெய்திருக்கிறது. அதேபோல புதுச்சேரியிலும் இன்றிரவு மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோக்துங்கன் வெளியிட்டிரும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

"சென்னையில் நேற்று இரவு நிகழ்ந்த மேகவெடிப்பு நிகழ்வைக் கருத்தில் கொண்டு, அனைத்து ESF/துறை சார்ந்த அலுவலகங்களும் உடனடியாகத் தங்களது கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் அவசரகாலத் திட்டங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். சென்னை வானிலை மையம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், மேகவெடிப்பு நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க முடியாததாலும், அவை நிகழ்ந்த பிறகே கண்டறியப்படுவதாலும், அதிகபட்ச எச்சரிக்கை அவசியம். வட இந்தியப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களால் கடந்த காலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புதுச்சேரிக்கு சென்னை புவியியல் ரீதியாக மிக அருகில் இருப்பதைக் கருத்தில்கொண்டு, அனைத்து ESF துறைகளும் - குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை, மின்சார வாரியம் மற்றும் காவல் துறை - உயர் எச்சரிக்கை நிலையில் இருந்து, எந்தவொரு எதிர்பாராத நிகழ்வுக்கும் உடனடியாக பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
பின்வரும் ஆயத்த நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு துறைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன:
i. தேங்கியுள்ள நீரை வெளியேற்ற, பொதுப்பணித் துறை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மோட்டார் பம்புகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
ii. தகவல் மற்றும் விளம்பரத் துறை மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் (மரங்கள்/மின்கம்பங்கள்/பழைய கட்டிடங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரைகள்/ஏரிகள் அருகே செல்வதைத் தவிர்க்கவும், வீடுகளை விட்டு வெளியேறும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது).
iii. அவசரகால நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
iv. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் முழுமையாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
v. எந்தவொரு அவசர நிலையிலும் போக்குவரத்து மேலாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த காவல் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications