புதுச்சேரியில் பரபரப்பு.. மோடியின் உருவப்படம் எரிப்பு.. ஒரே தள்ளு, முள்ளு
Recommended Video

புதுச்சேரி: ஆட்சிக்கு வர மட்டோம் என்பதற்காக வாக்குறுதிகளை பாஜக அள்ளி வீசுவதாகவும், பாஜகவிற்கு ஆட்சியின் இறுதிக்காலம் நெருங்கி கொண்டிருப்பதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளன்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அகில பாரத ஹிந்து மகா சபா அமைப்பை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை சுட்டு தீயிட்டு எரித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

கண்டன ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் காந்தியடிகளின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, எரித்த இந்துத்துவா அமைப்பினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தனாத்தை கண்டித்து, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்வர் பங்கேற்பு
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மகாத்மாவை இழிவு படுத்திய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மோடியின் உருவப்படம் எரிப்பு
ஆர்ப்பாட்டம் முடிந்ததை தொடர்ந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்ற பின்னர், காங்கிரஸ் கட்சியினர் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுக்க முயன்ற போது இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இறுதி காலம்
முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, சுதந்திரம் குறித்து தெரியாமல் காந்தியடிகளை பாஜகவினர் இழிவுபடுத்துவதாகவும், ஆட்சிக்கு மீண்டும் வர மாட்டோம் என்பதற்காக வாக்குறுதிகளை பாஜக வினர் அள்ளி விசும் நிலையில், அவர்களது ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

வாக்களிக்க மாட்டார்கள்
மேலும் தேர்தல் வரவுள்ள நிலையில் விவசாயிகளுக்கு மத்திய திட்டங்களை அறிவித்தாலும், அவர்கள் ஏமாந்து வாக்களிக்க மாட்டார்கள் என கூறிய அவர், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க கட்சியினர் பாடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications