புதுச்சேரியில் பரபரப்பு.. மோடியின் உருவப்படம் எரிப்பு.. ஒரே தள்ளு, முள்ளு
Recommended Video

புதுச்சேரி: ஆட்சிக்கு வர மட்டோம் என்பதற்காக வாக்குறுதிகளை பாஜக அள்ளி வீசுவதாகவும், பாஜகவிற்கு ஆட்சியின் இறுதிக்காலம் நெருங்கி கொண்டிருப்பதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளன்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அகில பாரத ஹிந்து மகா சபா அமைப்பை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை சுட்டு தீயிட்டு எரித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

கண்டன ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் காந்தியடிகளின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, எரித்த இந்துத்துவா அமைப்பினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தனாத்தை கண்டித்து, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்வர் பங்கேற்பு
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மகாத்மாவை இழிவு படுத்திய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மோடியின் உருவப்படம் எரிப்பு
ஆர்ப்பாட்டம் முடிந்ததை தொடர்ந்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்ற பின்னர், காங்கிரஸ் கட்சியினர் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுக்க முயன்ற போது இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இறுதி காலம்
முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, சுதந்திரம் குறித்து தெரியாமல் காந்தியடிகளை பாஜகவினர் இழிவுபடுத்துவதாகவும், ஆட்சிக்கு மீண்டும் வர மாட்டோம் என்பதற்காக வாக்குறுதிகளை பாஜக வினர் அள்ளி விசும் நிலையில், அவர்களது ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

வாக்களிக்க மாட்டார்கள்
மேலும் தேர்தல் வரவுள்ள நிலையில் விவசாயிகளுக்கு மத்திய திட்டங்களை அறிவித்தாலும், அவர்கள் ஏமாந்து வாக்களிக்க மாட்டார்கள் என கூறிய அவர், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க கட்சியினர் பாடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications