கொரோனா எதிரொலி.. எல்லைகளில் மருத்துவ குழுக்களை நிறுத்திய புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகள் அனைத்தும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Recommended Video
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் நிரந்தரமாக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு பயணிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டிற்கு தடை, உலக பிரசித்திபெற்ற காரைக்கால் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் மற்றும் அனைத்து பக்தர்களும் அங்குள்ள நளன்தீர்த்த குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மறு உத்தரவு வரும் வரை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சுற்றுலாப் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழக - புதுச்சேரி எல்லைப் பகுதிகளான கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, கன்னியக்கோவில் உள்ளிட்ட எல்லைப்பகுதிகள், மருத்துவ குழுவினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு ள்ளது.

புதுச்சேரி எல்லை பகுதியில் பேருந்து, கார், இரண்டு சக்கர வாகனத்தில் வரும் அனைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மருத்துவ குழுவினர் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்துகின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தால் அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, அவர்கள் எப்போது இந்தியா வந்தார்கள் என்பதையும் உறுதி செய்து கொள்கிறார்கள். மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications