புதுவையில் கொரோனா அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமலாகும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை இன்று தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

நடமாடும் தடுப்பூசி வாகனம்
புதுச்சேரியில் படுக்கை வசதி, வெண்ட்டிலேட்டர் வசதி, மருத்துவ குழுவினர் உள்ளடக்கிய நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

முக கவசம் கட்டாயம்
அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். விவசாயிகள் ஒன்று கூடும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் செல்லும்

கொரோனாவை தடுப்போம்
100 பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளுக்கும் தடுப்பூசி வாகனம் சென்று தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இது நல்ல வரவேற்பை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பகுதி நேர ஊரடங்கு அமலாகும்
மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் முக்கியம். பல இடங்களில் முழு அடைப்பு நடைமுறைப்படுத்தி இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் புதுச்சேரியில் முழு ஊரடங்கு போடப்படாது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்தால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிலைக்கு செல்லாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications