Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரியில் ஜனவரி முதல் அமலாகும் புது ரூல்ஸ்.. நோட் பண்ணுங்க.. ஆக்ஷனில் இறங்கும் போலீஸார்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், புதுச்சேரியில் 2025 புத்தாண்டு ஜனவரி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை சரியாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்கக் கூடாது, வேகமாக வாகனங்களை ஓட்டக் கூடாது, மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் அனைத்துப் பகுதிகளிலும் சாலை விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

helmet

சுற்றுலாப் பயணிகளின் டாப் 10 லிஸ்டில் புதுச்சேரியும் கட்டாயம் இடம்பிடித்திருக்கும். அந்த அளவுக்கு இயற்கையின் எழில் கொஞ்சும் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக, வார விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களில் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி கடற்கரையில் குவிவது வழக்கம்.

புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களில் ராக் கடற்கரை முதலிடத்தில் உள்ளது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பலரும் குவியும் இடமாக முதல் மாநிலமாக புதுச்சேரி உள்ளது. அதேபோல, பல்வேறு வகையான சிற்றுண்டிகள், விதவிதமான உணவுகள் கிடைக்கும் இடமாகவும் புதுவை உள்ளது.

புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டில் ஓர் அறிவிப்பு வெளியானது. ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து, ஹெல்மெட் அணிவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக இருந்த கிரண்பேடி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். ஆனாலும், வாகன ஓட்டிகள் அந்த அறிவிப்பை முறையாக கடைப்பிடிக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான வாகன ஓட்டிகள் மட்டுமே முறையாக ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் கட்டாயம் என்ற திட்டத்தை காவல் துறையினர் அமல்படுத்த உள்ளனர். இதுதொடர்பான கண்காணிப்பு பணிகளில் போக்குவரத்து போலீஸார் இறங்கியுள்ளனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+