Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ். பேரணி - மனித சங்கிலி போராட்டத்தை முறியடிக்கும் எதிர்க்கட்சியினர்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுசேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த உள்ள நிலையில், அந்த பேரணியை முறியடிக்கும் வகையில், மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் மனித சங்கலி போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரியில், காந்தி ஜெயந்தியான இன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வரும் புதுச்சேரியில், ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த மாநில காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் காமராஜர் சாலையில் இருந்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பேரணி தொடங்குகிறது.

Human chain protest by opposition parties against RSS rally Puducherry

காரைக்காலில் புதிய பேருந்து நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு இந்த ஊர்வலம் புறப்பட்டு, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலைகள் என முக்கிய சாலைகளின் வழியாக கடற்கரைக்கு சென்று, சிங்காரவேலர் சிலை அருகே ஊர்வலம் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த ஊர்வலகத்திற்கு, முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைதி பூங்காவாக திகழும் புதுச்சேரியில், மக்களிடையே பிளவை உண்டாக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தப் பேரணிக்கு, புதுச்சேரி ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றும் காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

இதனிடையே, புதுச்சேரியில் இன்று நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் பேரணியை முறியடித்து மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் மனித சங்கலி போராட்டம் நடத்த உள்ளதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக எம்.எல்.ஏ சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன், மதிமுக, விசிக, திக, மாணவர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் காலை, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சார்பில், மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+