புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல்படை வீரர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல்படை வீரர் ஒருவர் உட்பட மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 60 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதிதாக ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல் படை வீரர் ஒருவர் உட்பட மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 70 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119 ஆகவும் உயர்ந்துள்ளது.

Jipmer hospital doctors including 12 were affected for corona in Puducherry

ஏற்கனவே 47 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 2 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

புதுவையில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை தூக்கி வீசிய விவகாரம்.. விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ்புதுவையில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை தூக்கி வீசிய விவகாரம்.. விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ்

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுச்சேரியில் புதிதாக ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், மருத்துவர்களின் உறவினர்கள் 3 பேர், அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டெக்னிஷியன் ஒருவர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஓட்டுநராக உள்ள ஊர்காவல் படை வீரர், புதிய சாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திலாசுப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Jipmer hospital doctors including 12 were affected for corona in Puducherry

அவர்களில் 3 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூயிலும், 9 பேர் ஜிப்மர் மருத்தவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது வரை 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 119 ஆக உள்ளது.

Jipmer hospital doctors including 12 were affected for corona in Puducherry

Recommended Video

    கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

    அதுபோல் தற்போது 2 பேர் குணமடைந்து சென்றுள்ள நிலையில், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,118 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. அதில் 7,968 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 32 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Puducherry state coronavirus update. Jipmer hospital doctors including 12 were affected for corona in Puducherry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X