புதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக் கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
Recommended Video

புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மதுக்கடைகளை திறப்பதற்கு நேற்று அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து மதுபானங்களின் விலை, வரி உயர்வு தொடர்பாக அரசாணை இன்று வெளியானது. அதில் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும் புதுச்சேரியில் மட்டுமே விற்பனையாகும் மதுவுக்கு 25 சதவீதமும், சாராயத்துக்கு 20 சதவீதமும் கொரோனா வரி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கள்ளுக்கு கொரோனா வரி விதிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து மதுபானம் மற்றும் சாராயக்கடைகள் திறப்பது தொடர்பாக கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம், மதுபானக்கடை உரிமையாளர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படுகிறது. மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 10 முதல் இரவு 7 வரை திறந்திருக்கும். மதுக்கடைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும். சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

தமிழகத்திலிருந்து கொரோனா தொற்றாளர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். அதன்படி கொரோனா வரி விதிக்கப்பட்டு தமிழகத்துக்கு இணையான மது விலை இருக்கும். மதுபானங்கள் மீதான கொரோனா வரி 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் கலால்துறை விதியின்படி நபர் ஒருவர் 4 அரை லிட்டர் வரை மதுபானங்களை வாங்கிச்செல்லலாம் என தெரவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் குடிகாரர்கள் கவலையடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications