நாஞ்சில் சம்பத்துக்கு நேரமே சரியில்லை.. பேச ஆரம்பித்த உடனேயே பாய்ந்த வழக்குகள்!
Recommended Video

புதுச்சேரி: நாஞ்சில் சம்பத்துக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் அரசியல் மேடை ஏறிய உடனேயே அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை இழிவாக பேசியதாக பாலினம் சம்பந்தமாக கொச்சைப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.

நுணலும் தன் வாயால்
தவளகுப்பம் பகுதியில் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்யும் போது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆணா அல்லது பெண்ணா என தெரியவில்லை எனவும் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் கடுமையாக சாடினார்.

கடும் விமர்சனம்
மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கடுமையாக விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட தேர்தல் அதிகாரி அருணிடம் பாஜக நிர்வாகிகள் புகார் மனு அளித்து இருந்தனர்.

போலீஸ் நிலையத்தில் புகார்
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநரின் செயலர் சுந்தரேசன் தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் மீது அசிங்கமான வார்த்தைகளால் திட்டுதல் , பாலினம் சம்பந்தமாக கொச்சைப்படுத்தி பேசுதல், பெண்ணை பொது இடத்தில் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட
3 பிரிவுகளின் கீழ் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை வருமா
ஆளுநரின் செயலரே புகார் அளித்துள்ளதால் நாஞ்சில் சம்பத் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இலக்கிய பணியிலிருந்து அரசியல் பணிக்கு நாஞ்சில் சம்பத் திரும்பியதுமே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications