புதுச்சேரியில் குதிரையேற்றப் போட்டிகள்.. . 3 நாள்.. நூற்றுக்கணக்கான குதிரைகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டிகள் இன்று தொடங்கியது. இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் செயல்பட்டு வரும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி சார்பில் ஆண்டுதோறும் குதிரையேற்றப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 20 வது குதிரையேற்றப் போட்டிகள் இன்று துவங்கியது.

வரும் மார்ச் 1 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட 12 கிளப்களை சேர்ந்த 60 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 100 குதிரைகள் பங்கேற்றுள்ளன. இன்று முதல் போட்டியாக நடை அலங்கார பிரிவில் குதிரையை கட்டுப்படுத்துதல், நடை பயிற்சி, வணங்குதல் ஆகியவற்றை வீரர்கள் செய்து காட்டினார்கள்.

இதனை தொடர்ந்து மீடியம் டிரெஸ்சாஜ், 70 செ.மீ, 100 செ.மீ, ஷோ ஜம்பிங், எலிமென்டரி டிரெஸ்சாஜ், நோவிஸ் டிரெஸ்சாஜ், 105 செ.மீ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. குதிரையேற்றப் போட்டியை புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இப்போட்டியில் சர்வதேச நடுவர்களான சாமி, சுனில் ஸ்ரீவ்தாஸ் நடுவர்களாக செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications