புதுவையில் பாஜகவை கழற்றிவிட்டு... தனியாக களமிறங்கும் ரங்கசாமி... காரணம் என்ன?
புதுவை: சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் பாஜக, திமுக, மக்கள் நீதி மய்யம் என அனைத்து கட்சிகளும் கூட்டணிக்காக என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அவர் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரிக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஐந்து மாநிலங்களுடன் சேர்த்து மே 2ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சிகளே பிரதான கட்சிகளாக உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி புதுச்சேரியை ஆட்சி செய்துள்ளன.

காங்கிரஸ் ஆட்சி
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே இருந்தது. இருப்பினும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏகள் வரிசையாக தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் சிலர் பாஜகவிலும் லட்சுமி நாராயணன் என்ஆர் காங்கிரஸ் கட்சியிலும் ஐக்கியமானார்கள். அதேபோல திமுகவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் தனது பதவியை ராஜினாமா செய்ய, புதுவையில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியைப் பறிகொடுத்தது.

ஆட்சி அமைக்கவில்லை
என்ஆர் காங்கிரசுக்கு தற்போது எட்டு சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல பாஜகவுக்கு மூன்று நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜகவின் ஆதரவுடன் என் ஆர் காங்கிரஸ் கட்சியால் எளிதில் ஆட்சி அமைத்திருக்க முடியும். தேர்தல் சமயத்தில் ஆளும் கட்சியாக இருந்தால், அது சாதகமாக இருக்கும் என்பதால், ரங்கசாமி ஆட்சி அமைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரிமை கோருவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரங்கசாமி தொடர்ந்து அமைதி காத்தார். இதனால் புதுவையில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாஜக கூட்டணி
இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்குச் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் இணைந்து என் ஆர் காங்கிரஸ் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பாஜகவுக்கு ரங்கசாமி பிடிகொடுக்கவில்லை. இது குறித்து புதுவை பாஜக தலைவர் வி சுவாமிநாதன் கூறுகையில், "அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம், அவர் எங்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். கூட்டணியுடன் மட்டுமே புதுவையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

ரங்கசாமி ஆலோசனை
ஆனால், பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள ரங்கசாமி தொடர்ந்து தயக்கம் காட்டியே வருகிறார். புதுவையில் உள்ள 30 இடங்களில் மிக வலுவான 18 உறுப்பினர்களை என் ஆர் காங்கிரஸ் கட்சியால் களமிறக்க முடியும் என ரங்கசாமி நம்புகிறார். இதனால் ஆட்சி அமைக்க போதும் என்பதாலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அது வரும் காலங்களில் தனது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடும் என அவர் தயங்குகிறார். இது மட்டுமின்றி ரங்கசாமியை முதல்வர் வேட்பளாரக அறிவிக்கவும் பாஜக யோசிக்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மற்ற கட்சிகள் அழைப்பு
பாஜக தவிர மற்ற கட்சிகளும் என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து தூது அனுப்பி வருகின்றன. புதுவையில் முதலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்பிய திமுக, தனது முடிவை மாற்றிக்கொண்டு என் ஆர் காங்கிரஸ் கட்சிக்குக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. ஜனநாயகத்திற்கு விரோதமான பாஜகவைப் புதுச்சேரியில் நுழைய விடக்கூடாது என்பதால் காங்கிரஸ்-திமுக கூட்டணியுடன் ரங்கசாமி கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியும் இதையே வழிமொழிந்தது. அதேபோல மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்தும் கூட்டணிக்கு ஆஃபர் சென்றுள்ளது.

என்னவாகும் கூட்டணி
இப்போது இறுதி முடிவை ரங்கசாமி தான் எடுக்க வேண்டும். ஒருவேளை பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்தால், அதிமுக-என்ஆர் காங்கிரஸ்- பாஜக என்ற வலுவான கூட்டணி உருவாகும். அதேநேரம் தனித்துக் களமிறங்க ரங்கசாமி முடிவெடுத்தால், அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications