புதுவை சிறுமி பலாத்கார வழக்கு.. சீலிடப்பட்ட கவரில் பிரேத பரிசோதனை அறிக்கை.. போலீஸில் ஒப்படைப்பு
புதுவை: புதுவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் சீலிடப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து இன்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், விசாரணை குழு அதிகாரி கலைவாணன் ஐபிஎஸ்ஸிடம் தாக்கல் செய்யப்பட்டது.
வட்டாட்சியர் தலைமையில் நடந்த பிரேத பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. முதல் கட்டமான பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த 6ஆம் தேதியே வெளியானது. அதில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார் என்றும் அவருடைய பிறப்புறுப்பில் அதிக காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில் சிறுமியின் முழு பிரேத பரிசோதனை அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், முத்தியால்பேட்டை போலீஸில் தாக்கல் செய்தனர். சீலிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது சிறுமி கொலை வழக்கு விசாரணைஅதிகாரி கலைவாணன் ஐபிஎஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பது பின்னர் தெரியவரும்.
பின்னணி என்ன: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.
போலீஸில் புகார்: ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து சிறுமியின் வீட்டுக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் ஒரு மூட்டை மிதப்பதாக தகவல் கிடைத்தது.
பிரேத பரிசோதனை: இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் இருந்தது. அந்த சடலத்தை தனது மகள் என சிறுமியின் தந்தை அடையாளம் காட்டினார். இதையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
பாலியல் பலாத்காரம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் அவருடைய பிறப்புறுப்பில் உள் காயங்கள் அதிகமாக இருப்பதும், அந்த உறுப்பில் தையல் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் உடல் கடந்த 7 ஆம் தேதி வைத்திக்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விவேகானந்தன் (54), கருணாஸ் (19) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாஸ், சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிதருவதாக கூறி விவேகானந்தனின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்துத்தான் இவர்கள் இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் 14 நாட்களுக்கு அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க நேர்மையான அதிகாரியான கலைவாணன் ஐபிஎஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. தமிழ் தெரிந்த அதிகாரி என்றால் மக்களுக்கு எளிதாக கருத்தை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதால் கலைவாணனை நியமித்துள்ளார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications