வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.. பெண் உட்பட 2 வாலிபர்களை சுற்றிவளைத்த போலீஸ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சார தொழில் செய்துவந்த, பெண் உட்பட மூன்று பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடைபெற்று வருகிறது. 1000 ரூபாய் தொடங்கி 25 ஆயிரம் வரை பேக்கேஜ்கள் உள்ளன. விபச்சாரத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வந்தாலும், விபச்சாரம் தங்கு தடையின்றி நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.


இந்நிலையில் புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆண்கள் அதிகளவில் வந்து செல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இன்று அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரம் நடந்து கொண்டிருந்தது.

இதனையடுத்து வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்துவந்தது காக்கையன்தோப்பை சேர்ந்த மஞ்சுளா, மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த வாலிபர்கள் வினோத்குமார் மற்றும் ஜெகன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வாலிபர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு இளம்பெண்ணை மீட்ட போலீசார், அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போலீசாரிடம் பிடிபட்ட மஞ்சுளா மற்றும் இரண்டு வாலிபர்கள் மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமையகத்துக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களிலும் சோதனையில் ஈடுபடுமாறு அந்தந்த காவல்நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மசாஜ் சென்டர் என்ற போர்வையில் விபச்சாரம் நடத்தி வருபவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications