Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைதான கோவை இளைஞர்கள்.. பணம் வாங்கி வாங்கியதாக பரவும் தகவல்.. நடிகை தமன்னா ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: கோவையில் பல கோடி மேசாடி செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஹாஸ்பே நிறுவனத்தில் திறப்பு விழா மற்றும் விளம்பர விழாவில் பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் வரவழைக்கப்பட்டதாகவும். இதில் நடிகை தமன்னாவுக்கு ரூ.25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூ.18 லட்சம் என மொத்தம் 43 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவின.இதனிடையே தன்னை பற்றி பரவியது வதந்தி என்றும், இப்படி பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த ஹாஸ்பே நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என வாக்குறுதி அளித்துள்ளது. வாடிக்கையாளர்களை கவர கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளத. முதலீட்டாளர்களை நம்ப வைக்க விளம்பரங்களில் பிரபல நடிகைகளை களம் இறக்கியுள்ளது. முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் ஹாஸ்பே நிறுவனத்தின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்களை அந்த நிறுவனத்தினர் பங்கேற்க வைத்ததாக தகவல்கள் வெளியாகியது.

Puducherry Coimbatore Mahabalipuram

அதன்பின்னர் 3 மாதங்களுக்கு பிறகு மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் விழா நடத்தியதுடன், பிரபல நடிகையான காஜல் அகர்வால் மூலம் தங்களிடம் முதலீடு செய்த ஏராளமனோருக்கு சொகு கார்களை பரிசாக வழங்க வைத்தாககவும்செய்திகள் பரவின. கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், பிரபலங்களை வைத்து விழா என அதிக முதலீட்டாளர்களை கவர்ந்த நிலையில், உண்மை என்று நம்பி பலர் பணம் செலுத்தினார்களாம்

இப்படி டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் ரூ.50 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு 'ஹாஷ்பே' நிறுவனத்தால் பணத்தை கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.. நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தபடி பணத்தை கொடுக்க முடியாமல், அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டனர்.

எனினும் ஹாஷ்பே நிறுவன வங்கி கணக்கில் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு மோசடி கும்பல் ஜாலியாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் அசோகன் 98 லட்சம் ஏமாந்ததாக அளித்த புகாரின் பேரில் புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை தேடி வந்த போலீசார், கோவையில் நட்சத்திர ஓட்டலில் மோசடியில் தொடர்புடைய 36 வயதாகும் நித்தீஷ் ஜெயின் , 40 வயதாகும் அரவிந்த்குமார் இருப்பது தெரியவந்தது. அங்கு அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திறப்பு விழாவில் பங்கேற்க நடிகை தமன்னாவுக்கு ரூ.25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூ.18 லட்சம் என மொத்தம் 43 லட்சம் வழங்கப்பட்டுள்ள திடீரென தகவல்கள் பரவின. இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி. நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு புதுச்சேரி போலீசார் சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இது உண்மையா, இல்லையா என்பது போலீசார் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் செய்திகள் வேகமாக பரவின.

எனவே இதுபற்றி பிரபல ஆங்கில ஊடகம் நடிகை தமன்னாவிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு விளக்கம் அளித்த நடிகை தமன்னா, கிரிப்டோகரன்சி மோசடி குறித்து என்னை பற்றி பல்வேறு வகையான வதந்திகள் பரப்பப்படுவதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது போன்ற போலி, தவறாக வழிநடத்தும் மற்றும் தவறான அறிக்கைகள் மற்றும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்களில் உள்ள எனது நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். வதந்திகள் மற்றும் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமன்னா பதில் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+