நூதன முறையில் லேப்டாப் திருட்டு.. புதுச்சேரியில் கைவரிசை காட்டி சிக்கிய திருடன்
புதுச்சேரி: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் லேப் டாப்களை திருடியவரை, பாதிக்கப்பட்டவர்கள் சுற்றிவளைத்து, போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர் சென்னை செல்வதற்காக நேற்று மாலை புதுச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். பின்னர், சென்னை செல்லும் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார்.

அப்போது, இருக்கையில் தனது லேப்டாப்பை வைத்துவிட்டு கீழே இறங்கினார். பின்னர், சிறிதுநேரம் கழித்து மீண்டும் பேருந்தில் தனது இருக்கைக்கு சென்ற போது லேப்டாப் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோன்று மேலும் இருவர் தங்களது லேப்டாப்பை தேடிக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் பேருந்துநிலையம் முழுவதும் தேடியதில், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் தான் லேப்- டாப்புகளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது.

திருச்சியைச் சேர்ந்த தனது நண்பர்களான செல்வகுமார், முத்துக்குமார் ஆகியோருடன் சேர்ந்து தொடர்ந்து பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி லேப்டாப்புகளை திருடி வந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். பின்னர், அவரிடமிருந்து 6 லட்சம் மதிப்புள்ள 19 லேப்டாப்புகளை பறிமுதல் செய்த போலீசார் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், செந்திலின் நண்பர்களான செல்வகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications