இந்தியாவின் எல்லா காலேஜ் ஹாஸ்டலிலும் திருவாரூர் தமிழ்செல்வன் பேமஸ்.. புதுச்சேரியில் தரமான சம்பவம்
புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழக வால்மீகி மாணவர் விடுதியில் மதிய உணவு இடைவேளையின் போது அடிக்கடி லேப்டாப்கள் மாயமாகி வந்தது. இதை யார் திருடினார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனிடையே சிசிடிவி காட்சியில் பார்த்த போது ஒரு டிப்டாப் ஆசாமி திருடியது தெரியவந்தது. அவர் ஐந்து மாநிலங்களில் 500 லேப்டாப்கள் வரை திருடியதை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.
புதுவை காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் வால்மீகி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன் மதிய உணவு இடைவெளியின்போது ஒரே அறையில் 3 மாணவர்களின் 4 லேப்டாப்கள் திருட்டு போயிருந்தது. இது குறித்து பல்கலைக்கழக காவலாளி மகேஸ்வரன் புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மாணவர் விடுதி வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்தனர்.

அப்போது முகத்தில் 'கர்சிப்' கட்டிக்கொண்டு விடுதி அறைக்குள் வந்த ஒரு நபர், மாணவர்களின் லேப்டாப்களை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக போலீசாரின் உதவியை நாடிய காலாப்பட்டு போலீசார், மாணவர் விடுதியில் பதிவான திருட்டு ஆசாமியின் வீடியோ காட்சி பதிவுகளை அனுப்பி விசாரித்தனர். அடுத்த நாளே காலாப்பட்டு போலீசாருக்கு லேப்டாப் திருடன் குறித்த விவரம் அளிக்கப்பட்டது.

லேப்டாப்பை திருடியவர் திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 28) என்பதும், கடந்த ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மாணவிகள் விடுதியில் புகுந்து 10-க்கும் மேற்பட்ட லேப்டாப்களை திருடி சென்றவர் என்பதும் தெரியவந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார சட்டப்படிப்பு படித்த தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் மருத்துவ மாணவர்களின் விடுதிகளுக்குள் புகுந்து லேப்டாப் திருடுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

திருவாரூர் தமிழ்ச்செல்வன் மீது 30-க்கும் மேற்பட்ட லேப்டாப் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட லேப்டாப்களை திருடி ஆன்லைன் மூலம் குறைந்த விலைக்கு விற்று அதில் கிடைத்த பணத்தில் ஊர் சுற்றி ஜாலியாக இருந்து வந்தது தெரியவந்தது.
தாம்பரம் பகுதியில் அறை எடுத்து தங்கி கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் தமிழ்செல்வன் தினமும் கையெழுத்து போட்டு வந்துள்ளார். கடந்த 24ம் தேதி கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த அவரை காலாப்பட்டு போலீசார் கைது செய்தார்கள். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பரியரம் அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவிகள் விடுதியில் புகுந்தும் லேப்டாப் திருடிதற்காக தமிழ்செல்வன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்செல்வனிடம் இருந்து 4 லேப்டாப்களை பறிமுதல் செய்த போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications