புதுச்சேரியில் பரபரப்பு.. வெங்காயம் திருடிய கூலித் தொழிலாளி.. கட்டி வைத்து உதைத்த வியாபாரிகள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கல்லாப்பெட்டியில் கை வைக்கல... வெங்காயத்தை திருடிய திருடர்கள்.. கடைக்காரர் கதறல் !

    புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்கெட்டில் வெங்காய மூட்டையை திருடிய சுமை தூக்கும் தொழிலாளியை வியாபாரிகள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வட மாநிலங்களில் பெய்த கன மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்துவிட்டது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

    traders beat coolie for stealing onion bag

    இதனால் இல்லத்தரசிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ரூபாயிலிருந்து தற்போது 150 ரூபாயை தாண்டி வெங்காயத்தின் விலை நாள்தோறும் ஏறிகொண்டே போகிறது.

    விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும் வெங்காய தட்டுப்பாடும் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. இதனிடையே வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    traders beat coolie for stealing onion bag

    நிலைமை இப்படியிருக்க, புதுச்சேரியில் வெங்காய மூட்டையை சுமைதூக்கும் தொழிலாளி ஒருவர் திருடி சரமாரியாக அடி உதை வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பெரிய மார்க்கெட். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகள் மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு, சில்லரை வியாபாரிகளுக்கு இங்கிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    traders beat coolie for stealing onion bag

    இங்கு புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் பெரிய மார்க்கெட் இன்று அதிகாலை பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தபோது, அந்த வாலிபர் மார்க்கெட்டில் அடுக்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகளில் ஒரு மூட்டையை கடத்தினார்.

    traders beat coolie for stealing onion bag

    இதை கண்ட அந்த கடையின் உரிமையாளர் மற்றும் வியாபாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் மூட்டையை மீட்டு, அவரை சரமாரியாக தாக்கி கட்டி வைத்தனர். மேலும் இதுகுறித்து பெரியகடை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை போலீசார், வியாபாரிகளிடமிருந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பெரிய மார்க்கெட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+