புதுக்கோட்டையில் பதற்றம்.. தேர் திருவிழாவில் இருதரப்பு மோதல்! அரிவாள்வெட்டு - வீடுகளுக்கு தீவைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோவில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே இன்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மொத்தம் 6 பேர் காயமடைந்த நிலையில் குடிசை வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதோடு, பைக்குகளும் தீவைத்து எரிக்கப்பட்டது. அதோடு அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் அதிரப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு என்ற கிராமம் உள்ளது. இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலின் திருவிழா என்பது தொடங்கியது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா என்பது பிரசித்திப்பெற்றது. அதன்படி இன்று இரவு தேர் திருவிழா தொடங்கி நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேர் திருவிழா அமைதியாக முடிவடைந்தது.
இதையடுத்து அனைவரும் கோவிலில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். வடகாடு தெற்கு ஆர்ச் அருகே நின்ற சில இளைஞர்களுக்கும், இன்னொரு பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் லேசாக ஏற்பட்ட வாக்குவாதம் நேரம் ஆக ஆக அதிகமானது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது.
இதையடுத்து இருதரப்பினரும் மாற்றி மாற்றி தாக்கி உள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதற்கிடையே அந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் தங்களின் தரப்புக்கு ஆதரவாக சிலரை அழைத்து கொண்டு தாக்கி நபர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றனர். அங்கு இருதரப்பு மோதல் என்பது தீவிரமானது.
ஒரு தரப்பினர் அரிவாளை எடுத்து 2 பேரை வெட்டி உள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். இதற்கு பழித்தீர்க்கும் வகையில் இன்னொரு தரப்பினர் குடிசைகளுக்கு தீவைத்துள்ளனர். அதோடு 2 பைக்குகளுக்கு தீவைத்து எரித்தனர். மேலும் பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதனால் வடகாடு கிராமம் பெரும் பதற்றத்துக்கு உள்ளானது. இதுபற்றி தகவலறிந்ததும் போலீசார் வந்து தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க மாவட்ட எஸ்பி அபிசேக் குப்தா தலைமையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications