மன்னிப்பு கேட்ட அமித்ஷா. புதுக்கோட்டை மேடையில் கைக்கூப்பி தலைக்குனிந்து சொன்ன வார்த்தை.. என்ன நடந்தது?
புதுக்கோட்டை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட ‛தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற யாத்திரை பிரசாரத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று புதுக்கோட்டையில் நடந்தது. அதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கைக்கூப்பிப அனைவரிடமும் மன்னிப்பு கோரிய நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

‛தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட யாத்திரை பிரசார கூட்டத்தின் நிறைவு விழா புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்து வயலில் நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் உள்பட பிற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அமித்ஷா பேசியதாவது:
‛‛மாபெரும், மகத்தான, பழமையான, தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தமிழ்நாட்டின் புனித மண்ணுக்கு என்னுடைய நல் வணக்கங்களை தெரிவித்து உரையை தொடங்குகிறேன். ‛தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற இந்த பயணத்தை மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏப்ரல் மாதம் 26ம் தேதி பாஜகவின் என்டிஏ தலைமையிலான ஆட்சி அமையும்.
மாபெரும் அவையின் வாயிலாக தமிழக மக்களுக்கு அறைக்கூவல் விடுக்கிறேன். வாருங்கள் பிரதமர் மோடியின் லைமையில் அணிவகுப்போம். பாரதத்தின் வளர்ச்சி பயணத்தில் பங்கு பெறுவோம். தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் அக்டோபர் 12ம் தேதி தொடங்கியது. அனைத்து மட்ட மக்களோடு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் பாஜகவும், அதிமுகவும் இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க போகிறோம் எப்பாடுபட்டாவது திமுகவின் ஆட்சியை ஒழித்தே தீருவோம். தமிழ் மொழியை வளர்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை. தேர்வுகளை தமிழில் எழுதும் வசதிகளை பாஜக ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா?












Click it and Unblock the Notifications