Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏசி இயங்காததால் வாக்குவாதம்.. செங்கோட்டை - தாம்பரம் ரயிலை நடுவழியில் நிறுத்திய பயணிகள்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் ஏசி இயங்காததால், பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் புதுக்கோட்டை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகளுக்கு பிடித்தமான பயணம் என்றால் அது ரயில் பயணமாக தான் இருக்கும். பஸ், விமான சேவைகளை விட ரயிலில் பயணிக்கவே பலரும் விரும்புவர். இதற்காக ரயில்வேயும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. எனினும் ஒருசில நேரங்களில் பயணிகளை சலிப்படைய செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், நேற்று எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் ஏசி இயங்காததால் பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Passengers stopped Sengottai-Tambaram train midway due to AC not working

இதனால் பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 20684) இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில், ரயிலின் பி5 என்ற ஏசி கோச்சில் ஏசி இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். இது தொடர்பாக ரயில்வே எண்ணுக்கு பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்த ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயில் புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி ரயில் நிலையத்தை கடந்த போது பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். மேலும் ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கி ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளிடம் ஏசியை சரி செய்த பின்னரே ரயிலை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தற்காலிகமாக ஏசி சரி செய்யப்பட்டது. அதன்பின்னரே பயணிகள் ரயில் பெட்டியில் ஏறினர். இதையடுத்து அந்த ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சுமார் இரவு 11. 30 மணியளவில் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் அறந்தாங்கி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+