வாயில நுரை துள்ளுது.. நடுரோட்டில் வலிப்பு... எப்படிங்க பார்த்துட்டு பேசாம போறது.. சபாஷ் டாக்டர்!
நடுரோட்டில் வலிப்பு வந்த இளைஞரை டாக்டர் காப்பாற்றி உள்ளார்
புதுக்கோட்டை: "வாயில நுரை துள்ளுது.. நடுரோட்டில் வலிப்பு வந்துச்சு... உயிருக்கு போராடுகிறார்.. எப்படிங்க பார்த்துட்டு பேசாம போறது.. அதான் உதவி செய்தேன்" என்று உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி செய்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆலங்குடி, தவலைப்பள்ளம் சாலை வழியாக பெரியசாமி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார்.. இவர் ஒரு டாக்டர்... வழியில் ஒரு இளைஞர் வலிப்பு நோயால் துடித்து கொண்டிருப்பதை பார்த்தார்.. நடுரோட்டிலேயே கீழே விழுந்து.. நுரை தள்ளிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்ததும் டாக்டர் காரை நிறுத்த சொல்லி, அந்த இளைஞருக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றினார். அதன்பிறகு ஆம்புலன்ஸை வரவழைத்து மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தார். இந்த டாக்டருக்குதான் இப்போது பாராட்டு குவிகிறது.
இதை பற்றி அவர் சொல்லும்போது, "நான் இந்த ரோட்டில் வந்திருக்க மாட்டேன்.. டிராபிக் அங்கு அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வழியில் காரில் வந்தேன்.. எப்பவுமே நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை தருவேன்.. இன்னைக்கு ரோட்டில் வைத்து சிகிச்சை கொடுத்தேன். அவ்வளதுதான்..
ஆனால் நான் வரும்போது, ஒருசிலர் இந்த பக்கமாக போனார்கள்.. அந்த இளைஞனை பார்த்து கொண்டே போனார்களே தவிர அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.. அதை பார்க்கும்போதுதான் கஷ்டமாக இருந்தது.. டாக்டர் மட்டும்தான் இப்படி முதலுதவி தரணும்னு இல்லை.. பொதுமக்களும் இப்படி முதலுதவி செய்யலாம்.. அந்த இளைஞர் ரொம்ப போராடிட்டு இருந்தார்.. மூச்சுகூட விடமுடியவில்லை.. சுயநினைவும் இல்லை.
இப்படி இருந்தால், உடனடியாக அந்நபரை ஒரு பக்கமாக படுக்க வைத்து, மேல் காலை மடக்கி கீழே சாயாத அளவுக்கு வைத்து, கழுத்தை மேல் நோக்கி தூக்கி தலையை நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போது வாய் நுரை மெல்ல மெல்ல வெளியே வந்தபடியே இருக்கும்.. காற்றும் உள்ளே போகும்... அப்போதுதான் மூச்சு எளிதாக விட முடியும்... இதைதான் இந்த இளைஞருக்கும் செய்தேன். இப்போ அவர் ஆஸ்பத்திரியில் நல்லா இருக்காராம்.. அவர் சொந்தக்காரங்க எனக்கு போன் பண்ணி சொன்னாங்க.. கேட்கவே சந்தோஷமா இருக்கு என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications